Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மர வியாபாரிகள், அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

டிசம்பர் 02, 2023 12:49

நாமக்கல்: நாமக்கல், தாலுக்கா மர வியாபாரிகள் மற்றும் அறுவை ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பரமத்தி சாலை, குமார் இல்லம் 3 ஆம் தளத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வீரக்குமார், செயலாளர் மதன்லால் பட்டேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய சங்க தலைவரும், அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான ஜெயகுமார் வெள்ளையன், மாவட்ட வனத்துறை அலுவலரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மர அறுவை ஆலை உரிமையாளர்களும் மரம் இருப்பு குறித்த பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், உள்நாட்டு தேக்கு மரம் விற்பனை செய்வோர் அதற்கான இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எனவும், அறுவை ஆலைகளை ஆய்வு செய்ய வரும் வன அலுவலர்களுக்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

மேலும், மர அறுவை ஆலை உரிமத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்த விண்ணப்பங்களை அரசு விரைந்து பரிசீலித்து உரிமம் வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கூட்ட நிறைவில் சங்க பொருளாளர் காந்திலால் பட்டேல் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்